Tuesday, September 11, 2012

ஆசை நாயகியை கட்டி வைத்து மிருகத்தனமாக செக்ஸ் அனுபவித்த கிழட்டு சட்டத்தரணி!

21 வயது ஆசை நாயகியால் 68 வயது சட்டத்தரணி கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக புதிய அதிர்ச்சித் தகவல்கள் பலவும் வெளியாகி உள்ளன. கொலையாளியான யுவதியால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற பிந்திய வாக்குமூலம் முன்னைய வாக்குமூலத்தைக் காட்டிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆரம்பத்தில் சொல்லப்பட்டு இருந்த வாக்குமூலத்துக்கும், பின்னர் சொல்லப்பட்ட வாக்குமூலத்துக்கும் இடையில் அடிப்படையில் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக சட்டத்தரணியை பல்கணியில் இருந்து தள்ளி விட்டு இருந்தார் என்று ஆரம்பத்தில் சொல்லி இருந்தார் யுவதி. ஆனால் படுக்கை அறையில் சட்டத்தரணியை கட்டிப் போட்டு படுகொலை செய்து உள்ளார் என்று பிந்திய வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டு உள்ளார்.

பிந்திய வாக்குமூலமே உண்மையானது என்று பொலிஸார் நம்புகின்றார்கள்.

யுவதியின் பிந்திய வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டது இப்பதிவு.

சட்டத்தரணி அதீத பாலியல் வேட்கை உடையவர். பாலியல் நடத்தை மற்றும் நாட்டம் ஆகியவற்றின் திடீர் அதிகரிப்புக்காக பிரத்தியேக மாத்திரைகளை பயன்படுத்தி வந்திருக்கின்றார்.

நீலப் படங்கள் பார்க்கின்றமைக்கு அடிமையானவர். நீலப் படங்களில் தோன்றுகின்ற பெண்கள் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று யுவதியை வற்புறுத்தி வந்திருக்கின்றார்.

கடந்த மாதங்களாக யுவதியை கட்டி வைத்து போட்டு செக்ஸ் அனுபவித்து வந்திருக்கின்றார். இது மேலைத்தேய ஸ்டைல் என்று யுவதிக்கு கூறிக் கொள்வார்.

இதில் யுவதிக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆயினும் சட்டத்தரணியை ஆட்சேபிக்கின்றமை வல்லமை இல்லாதவராக இருந்து உள்ளார் யுவதி.

ஒரு மாறுதலுக்காக சட்டத்தரணியை கட்டிப் போட்டு அனுபவிக்க ஆசையாக உள்ளது என சம்பவ தினம் யுவதி குழைந்து இருக்கின்றார். சட்டத்தரணியும் சம்மதம் தெரிவித்தார்.

சட்டத்தரணியை கட்டிப் போட்டார் யுவதி. சட்டத்தரணியின் வாய்க்குள் துணிகளை அடைந்தார். இப்போது சட்டத்தரணியால் சத்தமிட முடியாது. பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

சட்டத்தரணியை பல்கணியில் இருந்து தள்ளி விட்டு இருக்கவில்லை. மாறாக சடலத்தை முதலாம் மாடியில் இருந்ந்து இழுத்துக் கொண்டு வீட்டுப் பூங்காவுக்கு கொண்டு வந்து இரு வாகனங்களுக்கு இடையில் போட்டு இருக்கின்றார்.

பத்திரிகை மூலம் சட்டத்தரணி பிரசுரித்து இருந்த திருமண விளம்பரத்தைப் பார்த்து சந்தித்துப் பேசியவர்தான் யுவதி. சட்டத்தரணி உண்மையில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் 1972 ஆம் ஆண்டு பிறந்தவர் என்று சொல்லியமையுடன் போலி ஆவணங்களை காண்பித்து யுவதியை நம்ப வைத்து இருக்கின்றார்.

சுமார் 07 மாதங்களுக்கு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் பின்புதான் யுவதிக்கு உண்மை தெரிய வந்தது.

சட்டத்தரணி வழமைக்கு மாறான பாலியல் நடத்தை உடையவர். திருமணம் ஆன நாளில் இருந்த யுவதி மீது இவருக்கு சந்தேகம். இவரது சித்திரவதைகள் தாங்க முடியாதவை.

இவரது முன்னாள் மனைவி, இரு ஆண் பிள்ளைகள் தெகிவளையில் வசிக்கின்றார்கள். மூத்த மகனுக்கு வயது 29. இளைய மகனுக்கு வயது 25.

முதல் மனைவி சூப்பர் அழகி. சொந்த இடம் மாத்தறையில் கொடகம. சட்டத்தரணிக்கும் முதல் மனைவிக்கும் இடையில் 20 வயது வித்தியாசம். கணக்காய்வு வேலை ஒன்றில் ஈடுபட்டு இருந்தபோதுதான் இருவரும் சந்திக்க நேர்ந்து உள்ளது.

திருமணமாகி மாத்தறையில் வசித்தனர். அந்நாட்களில் வீட்டுக்கு எவரும் வர சட்டத்தரணி அனுமதித்து இருக்கவில்லை. அத்துடன் மனைவியை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வந்திருக்கின்றார். வெளியில் சென்று வர அனுமதித்து இருக்கவில்லை. மனைவிக்கும் பிக்கு ஒருவருக்கும் இடையில் கள்ளத் தொடர்பு என்று சட்டத்தரணிக்கு சந்தேகம் வந்து விட்டது. இதனால் வீட்டில் ஒவ்வொரு நாளும் சண்டைதான்.

விவாகரத்து வழக்கு நடவடிக்கைகளுக்காக வருகின்ற பெண்களை கட்டாயாப்படுத்தி செக்ஸிற்கு சட்டத்தரணி உட்படுத்தி வந்திருக்கின்றார். இப்பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்கின்றமை இவரின் பொழுதுபோக்கு. இவற்றை அறிந்தவுடன் முதல் மனைவி பிரியத் தீர்மானித்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்.

பாலியல் நடத்தைத் தூண்டல் மாத்திரைகள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஆகியவற்றை பொலிஸார் கண்டெடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com