Thursday, August 30, 2012

முன்னேஸ்வரம் பலிபூசை ஜனாதிபதியின் வேண்டுதலில் ஒத்தி வைப்பு.

புத்தர் பெருமானின் கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் வயம்ப பிரதேசத்தில் காட்சிக்கு வைக்கப்படும் காலத்தில், அப்பிரதேசத்தில் மிருக பலி பூஜை வேண்டாம் என ஜனாதிபதி முன்னேஸ்வரம் ஆலய நிர்வாகத்தினரிடம் விடுத்த வேண்டுதலை அடுத்து இவ்வாண்டு மிருக பலி பூஜையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் காளி கோவிலின் பிரதம குருவான சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் முதலாம் திகதி இம்மிருக பலி பூஜை நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று வியாழக்கிழமை காலை கூடிய முன்னேஸ்வரம் காளி கோவில் நிர்வாக சபையினர் இந்த முடிவை எடுத்ததாகவும், வருடாந்தம் இடம்பெற்றுவரும் மிருக பலி பூஜையினை ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் இவ்வருடம் மாத்திரம் நிறுத்துவதென முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com