Thursday, August 30, 2012

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் குண்டை வெடிக்க செய்தனர்: 3 நாட்களாக தீ எரிகிறது

2-ம் உலக போருக்கு காரணமான ஜெர்மனியில் அந்த போரின் போது பயன்படுத்த வைத்திருந்த குண்டுகள் பல இடங்களில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதற்கிடையே ஸ்க்வாபிங் மாவட்டத்தில் 250 கிலோ எடை கொண்ட குண்டு புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை செயலிழக்க செய்யும் முயற்சி தோல்வியடைந்தது.

இதையடுத்து இந்த குண்டு முனிச் நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்வதற்கு முன்னதாக அந்த பகுதியில் இருந்த 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

குண்டு வெடித்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. அந்து பகுதி முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கியது. இதன் சத்தம் பல கிலோ மீட்டர் துரத்துக்கு கேட்டது. குண்டு வெடித்ததால் எழுந்த தீ கடந்த 3 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com