Friday, August 31, 2012

போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் வழங்கவுள்ளது.

இலங்கையில் போர் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்கள், அத்துடன் தெற்கு மாகாணத்தில் 2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை இழந்தவர்கள், அவற்றை திருத்தியமைத்துக் கொள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க விருப்பதாகவும் இந்தக் கடன் டி.எஃ.சி.சி வர்தன வங்கியூடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ல் 30 ஆண்டு யுத்தம் முடிவற்ற பின்னர், வடக்கு கிழக்கில் வீட்டுத் தேவைகள் அதிகரித்துள்ளதாகவும், இதற்கான கடன் வழங்கும் திட்டத்தை டி.எஃ.சி.சி வர்தன வங்கியூடாக நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தனியார் துறை செயற்பாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பிலிப் எர்குய்கா அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com