Monday, August 20, 2012

இந்தியாவால் செய்யமுடியாததை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ளார்

இந்தியாவால் செய்யமுடியாததை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்து முடித்துள்ளார் எனவும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியப் படையினரால் தேற்கடிக்க முடியாமல் இருந்த எல்.ரி.ரி.ஈ யினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடித்துள்ளதுடன்,அவர் ஜனாதிபதியான பின்னரே நாடு பல முன்னேற்றங்களையும், அபிவிருத்தியையும் அடைந்துள்ளது என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கட்சியை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், டி. எஸ். சேனநாயக்க போன்றோர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த காலத்தில் அக்கட்சி நாட்டுக்குச் சேவை செய்யும் கட்சியாக இருந்தது எனவும், தற்போது அக்கட்சி சுயநலத்துடன் செயற்படுவதுடன் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com