Wednesday, August 15, 2012

விமானப் பணிப்பெண்ணின் முன்னாள் காதலன் குடையப்படுகின்றார்.

கடந்த 3ம் திகதி பாமன்கடையில் வைத்து 27 பக்கற் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்ய ப்பட்ட விமானப் பணிப் பெண்ணின் முன்னாள் காதலன் பொலிஸாரால் குடைந்தெடுக்கப்படுகின்றார். குறித்த நபர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கணக்காளர் வேலை செய்கின்றார் எனவும், இவர்தான் தனக்குப் போதை பொருள் பாவனையைப் பழக்கியவர் என்று, கைதுசெய்யப்பட்ட 29 வயடதுடைய ரோச்சல் ஆன் பார என்ற அந்த விமான பணிப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஹெரோயின் போதைப் பொருளுடன் விமானப் பணிப்பெண் கைதுசெய்யப்பட்டதையடுத்து தற்பொழுது சுங்கப் பிரிவினர் விமானத்தள ஊழியர்களின் உடமைகளை பரிசோதிக்கவும் கண்காணிக்கவும் தீர்மானித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com