Tuesday, August 7, 2012

வடகிழக்கில் அபிவிருத்திகள் சூப்பராம். மேலும் உதவி வழங்கவும் தயாராம் என்கிறது பிரித்தானியா.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களுக்கு விஜயம் செய்து, நிலைமைகளை நேரில் அவதானித்த ஜேம்ஸ் வோட்டர் உள்ளிட்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, கொழும்பில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டில், வடக்கு கிழக்கு அபிவிருத்திகளை முன்னிட்டு, இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தாங்கள் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதேபோன்று, தெற்கில் இடம்பெறும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை இவர்கள் அவதானித்ததன் மூலம், முழு நாட்டிலும் சம அளவிலான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க, இலங்கை அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாக, தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்திலும் இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க, தயாராகவுள்ளதாகவும், இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com