Monday, August 13, 2012

ஆதிவாசிகள் தினநிகழ்வு (படங்கள் இணைப்பு )

சர்வேதேச ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு அண்மையில் ரத்துகல பிரதேச ஆதிவாசிகள் கிராமத்தில் நடைபெற்றது. இங்கு ஆதிவாசிகளுக்காக மருத்துவ முகாமும், அதிவாசிகள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை தேசிய ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தும் நிகழ்வும் ஆதிவாசிகளின் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அதிவாசி மக்களுடன் மனித அபிவிருத்தி தாபனத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் திரு பி.ஸ்ரீகாந்த்இ அம்பாறை காரியாலய மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளர் திரு. று. சந்திரஸ்ரீஇ அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் திரு.ரணகல மற்றும் தேசிய ஊடகவியலாளர்கள்இ மற்றும் அம்பாறை மாவட்ட சுகாதார வைத்திய குழுவினரும் பங்கபற்றி உரையாடுவதையும் படங்களில் காணலாம்.







படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com