Thursday, August 9, 2012

தனது 4 வயது மகனை கொலை செய்ய முயற்சித்த தாய் கைது

வெல்லவாயவில் தனது 4 வயதான மகனை கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவரை கைது செய்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாய் தனது 4 வயதுடைய மகனின் கால்களை கட்டி கண்களுக்கு மிளகாய் தூள் தூவி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என தெரியவருகின்றது.

அயலவர்களினால் பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com