Thursday, August 9, 2012

அநுராதபுர சிறை உத்தியோகத்தர்கள் 6 பேர் கைது

பஸ் சாரதி ஒருவரையும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் தாக்கிய குற்றச்சாட்டில் அநுராதபுர சிறை உத்தியோகத்தர்கள் 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸில் ஏறுவதற்காக குறித்த பஸ் வண்டியை நிறுத்த முயற்சித்தபோதுகுறித்த தனியார் பஸ் சாரதி பஸஸை நிறுத்தாமல் சென்றதாகவும், இதனால் கோபமடைந்த தாங்கள் வேறொரு வாகனத்தில் சென்று சாரதியை தாக்கியதாகவும், தடுக்க வந்த பொலிஸ் அதிகாரியை தாக்கியதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறை உத்தியோகத்தர்கள் மது அருந்தியிருந்தனர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com