Saturday, August 18, 2012

போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை.

மயக்க மருந்துகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மன்னனும், அவனது இரண்டு சகாக்களுக்கும், மயக்க மருந்துகள் மற்றும் உளவியல்சார் பொருட்கள் சட்டத்தின் கீழ், நீதிபதி எம். மொனியால் முறையே 20 மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மூவரும் 2004 ல் ஹெரோயினை இலங்கைக்கு கடத்தியமை தொடர்பாக மயக்க மருந்துகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சிறிஸ்கந்தராஜா (38) ரங்கநாதன் பிரபாகரன் (45) மற்றும் என். காண்டீபன் (27) என்போரே இவ்வாறு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்ட்டவர்களாவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com