Wednesday, August 15, 2012

இலங்கையிலிருந்து பாக்கிஸ்தானுக்கு 20 சிறைக்கைதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட இருபது பாக்கிஸ்தானியர்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சிறைக் கைதிகள் பரிமாற்றல் திட்டத்தின் கீழ் பாக்கிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாக்கிஸ்தானின் பல பகுதிகளைச் சேர்ந்த குறித்த சிறைக் கைதிகள், தற்பொழுது கராச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும், இவர்களை அவர்களின் உறவினர்கள் விரும்பினால் தத்தமது பிரதேசங்களிலுள்ள சிறைச்சாலைகளில் தண்டனைக் காலம் முடியுமட்டும் சிறை வைக்கும்படி கோரலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com