Saturday, July 21, 2012

மன்னார் நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரை கைது செய்ய கோரிக்கை.

மன்னார் நீதிபதிக்கு கொலை அச்சுறு த்தல் விடுத்த அமைச்சரை கைது செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்ட மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரில் மீனவர்களுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினையை அடுத்து, முஸ்லிம் பகுதி மீனவர்கள் 16 பேரை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து குறித்த நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சட்டமா அதிபருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, நீதிபதிக்கு கொலை அச்சறுத்தல் விடுத்த அமைச்சரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், நீதிமன்ற தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வுள்ளதாகவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com