Friday, July 13, 2012

கலைஞர்களுக்கு மோட்டார்வண்டிக் கடன் வழங்கும் திட்டம் துரிதமாகின்றது.

2012 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில், சிரேஷ்ட கலைஞர்களுக்கு மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வட்டியில்லா கடன் வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த ஆலோசனையை அமுல்ப்படுத்தும் முகமாக, கலைஞர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது அரசதரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விண்ணப்பங்களையும், அது தொடர்பான விபரங்களையும், தகவல் ஊடகத்துறை அமைச்சிலும் இணையதளங்களுடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். அண்மையில், சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் இது தொடர்பான அறிவித்தல்கள் வெளியிடப்பட்டதாக, தகவல் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com