Wednesday, July 25, 2012

மஹிந்த அரசு தமிழ் மக்களுக்கு தீர்வு தராது எனச் சொல்ல மாட்டேன் என்கிறார் சுமந்திரன்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தினுள் தீர்வு கிடைத்துவிடாது என்று தன்னால் கூறமுடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். டெய்லிமிரர் பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியொன்றில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் உள்ளவரை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா எனக் கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் கடந்த கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடவில்லை இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றீர்களே எனக்கேட்டபோது, நிலைமைகள் கடந்த முறையைவிட இம்முறை சிறப்பாக காணப்படுகின்ற காரணத்தினால் போட்டியிடுகின்றோம் எனக் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com