Tuesday, July 24, 2012

தம்புள்ளையில் இரண்டு மாதத்தில் பெருங்குழப்பம் ஏற்படலாம் – அஸ்கிரிய மகாநாயக்கர்.

தம்புள்ளை புனித பூமியின் பிரச்சினயை இன்னும் இரண்டு மாதத்துக்குள் தீர்க்காவிட்டால் மிகப் பெரிய குழப்ப நிலை தோன்றலாம் எனவும், அதற்கு புத்த சாசன அமைச்சே பொறுப்பேற்க வேண்டும் என்றும், தேரரிடம் ஆசி பெற வந்த புத்த சாசன அமைச்சின் புதிய செயலாளர் திரு டப். எம். கே. பி. திசாநாயக்காவிடம் அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்கர் அதிவண. உடகம ஸ்ரீ புத்தர கித்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பாக சகல தரப்பினரையும் தேரர் பேசியதாகவும், ஆறு மாத்துக்குள் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து விடுகிவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள் எனவும், ஆனால் இதுவரை ஒன்றும் நடைபெறவில்லை எனவும், இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்தால், தான் அந்தப் பக்கம் போகவே மாட்டேன் என்றும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com