Tuesday, July 24, 2012

ரணில் சொன்னது ஒரு நகைச்சுவை–பொன்சேகா! ரணிலால் மகிந்தவைத் தோற்கடிக்க முடியாது-லால்!

தன்னை 20 ரூபா கொடுத்து ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் சேரச் சொன்னது ஒரு நகைச்சுவை என்று சரத் பொன்சேகா த ஐலன்ட் செய்தியிதழுக்கு தெரிவித்துள்ளார். ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கண்டிக்கு வந்திருப்பதாகக் கூறிய அவர், தான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும், தனது சொந்த கட்சியை ஆரம்பிக்கப் போவதாகவும், திரான் அலஸ் அதன் செயலாளராக இருப்பார் என்றும், இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு பொதுவான எதிர்க்கட்சித் தளத்தை உருவாக்கப் போவதாகவும், தெரிவித்துள்ளார்.

ஜ.தே.மு பாராளுமன்ற உறுப்பினர் திரான் அலஸ் கருத்து தெரிவிக்கையில், மே 21 ல் சரத் பொன்சேகா விடுதலையாகி வந்த பிறகு, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தவிர வேறு யாரும் அதிகமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் நலம் விசாரித்ததில்லை என்றும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஜ.தே.முண்ணணியினர் எவரும் ஜெனரல் பொன்சேகாவின் குடியியல் உரிமை, ஓய்வூதியம் போன்றவைகளை மீள அளிக்குமாறு கதைத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சியையும் அதன் தொழிற் சங்கங்களையும் பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் லால் பெரேரா கூறுகையில், ரணில் விக்கிரமசிங்கவால் ஒருபோதுமே மகிந்த ராஷபக்ஷவைத் தோற்கடிக்க முடியாதென்றும், செயற்குழுவில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் கட்சி யாப்பை மாற்றியிருப்பதாவும், இதனால் ரணிலுக்கு மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறை போட்டியிடுவதற்காக அரசியல்யாப்பை மாற்றியது பற்றி விமர்சிக்க அருகதையில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com