Friday, July 13, 2012

மனைவின் தலையை வெட்டிக்கொன்று விட்டு தலைமறைவானவர் மாட்டினார்.

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் மனைவியின் தலையை வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படும் கணவரான சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை தாம் கைது செய்துள்ளதாக வாகரைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
 
கடந்த 2012.06.30ம் திகதி வெருகல் கல்லறுப்பு பிரதேசத்தில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் வெட்டிக் கொலை செய்ததாகக் தெரிவிக்கப்படும் இச்சந்தேக நபர் கடந்த இரண்டு வாரங்களாக காட்டுப்பகுதியில் தலை மறைவாகியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
 
தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com