Friday, July 27, 2012

13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது.

தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக மகவ பொலிஸார் தெரிவித்துள்ளார். 119 என்ற அவசர அழைப்பிற்கு வந்த தகவலையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி இரவு தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்வதாக குறித்த நபர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தயார் பொலிஸில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மகவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கைது செய்யப்பட்ட நபரை மகவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com