Saturday, April 7, 2012

ஜே.வி.பி.யின் மாற்றுக் குழுவின் தலைவர் மற்றும் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவி கைது!

ஜே.வி.பி.யின் மாற்றுக் குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுது ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேம்குமார் குணரட்னம் கிரிபத்கொடையில் வைத்தும், திமுத்து ஆட்டிகல தலவத்துகொடயில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஜனக சுதார தெரிவித்துள்ளார்.

பிரேம்குமார் குணரட்னம் தலைமையிலான ஜே.வி.பி மாற்றுக் குழுவினர் மக்கள் பேராட்ட இயக்கத்தையும், முற்போக்கு சோசலிசக் கட்சியையும் ஸ்தாபித்தனர்.

திமுத்து ஆட்டிகல, சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் எனும் புதிய அமைப்பின் தலைவியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com