Friday, April 6, 2012

அநுராதபுரத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயரிழப்பு : இருவர் காயம்

அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் கம்பிரிகஸ்வௌ பிரதேசத்தில் மின்னல் தாக்கியதால் இருவர் காயமுற்றதுடன் ஒருவர் உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் காயமுற்ற இருவரும் அநுராபுரம் வைத்தயசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்வத்தில் உயிரிழந்தவர் 45 வயதுடைய அஹமது லெப்பை காசிம் முஹமட் என்பவராவர்.

இது குறித்து வானிலை அவதானிய நிலைய அலுவலகத்தின் அதிகாரி அனுஷ வர்ணசூரிய கருத்துத் தெரிவிக்கையில், இவ்வருடத்தின் போது காலநிலை மாற்றத்தின் காரணமாக மின்னல் தாக்கி எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர்கள் சிலாபம், ஹப்புத்தளை,பதுரலிய, அவிஸ்ஸாவிலை மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நாட்களில் நிலவும் காலநிலை மாற்றத்தால் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதால் மின்னத் தாக்கல் அதிகளவு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பத்தின் போது திறந்த வெளியரங்குகளில் மைதானம், வயல்வெளி போன்ற இடங்களில் நிறப்தைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மின் உபகரணங்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் வானிலை அவதான நிலைய அலுவலகத்தின் அதிகாரி அனுஷ வர்ணசூரிய மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com