Thursday, March 1, 2012

சிரியா மீதான மனித உரிமை மீறல் பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றம்

ஜனாதிபதி பஸார் அல் - அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அங்கு மனித உரிமை மீறல் அதிகரித்துள்ளதாகவும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரியாவுக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யாஇ சீனா, கியூபா ஆகிய மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

இந்தியா, பிலிபைன்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

சிரியாவின் மனித உரிமை மீறல் குறித்து 47 நாடுகள் கூடி விவாதித்த நிலையில் சிரியா அதனை நிராகரித்து வெளிடநப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com