Saturday, March 17, 2012

இன்னொருவரின் கடவுச்சீட்டில் பிரான்ஸ் செல்ல முயன்ற நபருக்கு பிணை

இன்னொருவருக்கு சொந்தமான நெதர்லாந்து கடவுச்சீட்டை பயன்படுத்தி மோசமான முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை , நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார் .

சந்தேக நபர் 2012 மார்ச் மாதம் 3 ஆம் திகதி கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com