Wednesday, February 29, 2012

தந்தையை கொலை செய்த மகனுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை

திடீரென்று ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தனது தந்தையின் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த மகனுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் .

ஜா-எல ஏக்கல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தீருமணமான நபருக்கே சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது..பிரதிவாதி நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

2008 மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஜா –எல , ஏக்கல பிரதேசத்தில் வைத்து தனது தந்தையான டைலஸ் எரிக் அன்ரனி (51 வயது) என்பவரை கொலை செய்ததாக பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. பிரதிவாதியின் தாயார் கொலை சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வெளிநாட்டில் இருந்ததாகவும், பிரதிவாதியும் கொலை செ;யப்பட்டவரும் (தந்தை )ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் விசாரணையின் போது தெரியவந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com