Tuesday, February 28, 2012

இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்ற 37 அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆதரவு

இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில், பிரேரனைக்கு ஆதரவு வழங்க, சுமார் 37 அரச சார்ப்பற்ற அமைப்புகள் ஜெனீவா நகருக்கு வருகை தந்துள்ளதாக, தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச நெருக்கடி குழு உள்ளிட்ட சர்வதேச அரச சார்ப்பற்ற அமைப்புகள் தற்போது ஜெனீவாவில் ஒன்றுகூடி, இலங்கைக்கு எதிரான பிரேரனையைக்கொண்டு வருவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசாங்கம் அறிவித்துள்ளது

சூழ்;ச்சிகளின் பின்னணியில் உள்ள அரச சார்ப்பற்ற அமைப்புகள் முன்னெடுத்து வரும் கருத்துகளை தோல்வியடையச்செய்வதற்கென, இலங்கையின் அரச இராஜதந்திரிகள் குழு, உயர்ந்தபட்ச முயற்சியில் ஈடுபட்டுளள்னர்

இதேவேளை ஆதரவு தெரிவித்து, ஜெனீவா நகரில் இலங்கையர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு, அவர்கள் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com