Sunday, January 29, 2012

வடமராட்சியில் வீட்டின் மேல் இரசாயனத்துளிகள் வானிலிருந்து விழுகின்றன.

பருத்தித் துறையில் உள்ள வீடென்றில் கடந்த 11ம் திகதியில் இருந்து வானத்திலிருந்து இராசயனத் துளிகள் விழுவதாக தெரிவிக்கப் படுவதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை இராமலிங்கம் வீதியில் உள்ள மேற்படி வீட்டில் வானத்திலிருந்து இராசாய துளிகள் விழுவதால் வீட்டில் இருந்த மரங்கள் செடிகள் கருகியுள்ளன என வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

அதிகாலை வேளையிலேயே இவ்வாறு இராசாயன துளிகள் விழுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வீட்டில் உள்ள உபகரணங்கள் யாவும் பாதிப்படைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com