Sunday, January 29, 2012

ஊடகவியளாளர் ஷாஜஹானுக்கு சாமஸ்ரீ தேச கீர்த்தி விருது

எழுத்தாளரும் கவிஞரும் ஊடகவியளாருமான எம். இஸட். ஷாஜஹானுக்கு (கலாநெஞ்சன்) அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

சாமஸ்ரீ பட்டமளப்பு விழா சனிக்கிழமை (28-1-2012) பிற்பகல் 1.30 மணிக்கு இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் நடைபெற்றது.

கலாநெஞ்சன் ஷாஜஹான் இதுவரை இரண்டு கவிதை தொகுதிகளையும் இரண்டு இஸ்லாமிய பாடல்கள் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அத்துடன்;, அச்சு இலத்திரனியல் ஊடகங்களில் கவிதை பாடலாக்கம் சிறுகதை கட்டுரை விமர்சனங்கள் என பல்வேறு இலக்கியப் படைப்புக்களை தொடர்ந்து எழுதிவருகிறார். தேசிய தமிழ் நாளிதழ் ஒன்றில் பிரதேச ஊடகவியலாளராகவும் பல வருடகாலமாக பணியாற்றி வருகிறார்.

இவர், தொலைக்காட்சி ,வானொலி, மற்றும் மேடைகளில் இடம்பெற்ற கவியரங்க நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்பற்றியுள்ளதுடன், இவரது பேட்டிகளும் அந்த ஊடகங்களில் பல தடவைகள் ஒலி,ஒளிபரப்பாகியுள்ளன.

தேசிய ரீதியில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகள் பலவற்றில் இவர் பல விருதுகளையும் பரிசில்களையும் பெற்றுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com