Monday, January 30, 2012

முல்லைத்தீவில் தாயை இழந்த மாணவி மீசாலையில் தாத்தாவால் கற்பழிப்பு. .

முல்லைத்தீவில் தாயை இழந்த பதின்ம வயது மாணவி ஒருவர் தனது தாயின் தகப்பனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மீசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துக்குக் காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் மாணவியின் பேரனாரை (வயது 65) தாம் கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மீசாலையில் வசிக்கும் பிரஸ்தாப மாணவி தமது தாயின் தந்தையான பேரனா ருடன் வசித்து வருகிறார். சம்பவ தினமன்று மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற சந்தேக நபர் மாணவியைத் துஷ்பிரயோகம் புரிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரஸ்தாப மாணவி மறு நாள் தனது ஆசிரியை ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கதியைக் கூறியதை அடுத்து அந்த மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக மாணவியின் சித்தி ஒருவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக் கப்பட்டார். இதனை அறிந் ததும் சந்தேக நபர் நஞ்சருந் தியுள்ளார். அவர் உடனடி யாக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார். பொலிஸார் அவ ரைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். அவர் தொடர்ந் தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸார் மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட மாணவியின் தாயர் இறந்த பின்னர் தந்தையார் வேறு திருமணம் செய்து கொண்டதை அடுத்தே இவர் குறிப்பிட்ட 65 வயதுடைய பேரனுடன் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேரனார் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆபாசப் படங்களைக் காட்டி வன்புணர்வு புரிந்தார் எனபதும் மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com