Thursday, January 5, 2012

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலத்தால் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவு சிலை சேதமாக்கப்படமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இன்று, கொழும்பை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளோர் அலரி மாளிகை வரையும் சென்று அங்கு ஜனாதிபதியிடம் சம்பவம் தொடர்பான மனு ஒன்றையும் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,இன்று அதிகாலை 2.45 மணியளவில் வெடிப்பு சம்பவமொன்று பல்கலைக்கழக நினைவுச்சிலை மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com