Monday, January 2, 2012

சிங்கபூருக்கு சட்டவிரோதமாக பணம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கைது!

சட்டவிரோத வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த நபர்கள் சிங்கப்பூருக்கு யூரோ மற்றும் டொலர் நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் புறக்கோட்;டை பொலிஸார் இவர்களை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து சுமார் ஒருகோடியே 17 இலட்சத்து 49 ஆயிரம் ரூபா பெறுமதியான யூரோக்கல் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அரசுடமையாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா ஒரு இலட்சம் ருபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com