Monday, January 9, 2012

மலையகத்து மேவினை உங்களுக்கு தெரியுமா?


அதிரடி அரசியல் செய்வதாக எண்ணிக் கொண்டு மக்களுக்கு அநியாயம் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் இனம்காண தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மேர்வின் சில்வாவைப் போல் பகிரங்கமாக இவற்றை செய்வதிலும் பார்க்க தண்ணிக்குள் நெருப்பு கொண்டு போவது போல மறைமுகமாக அட்டூழியம் செய்யும் அரசியல்வாதிகள் பலர் இருக்குத்தான் செய்கிறார்கள். அந்த வரிசையில் மலையகத்திலும் ஒருவர் வலம் வருகின்றார்.

மேர்வின் கூட அமைச்சரான பின்தான் அட்டூழியங்களை செய்தார். இவர் அதற்கு முன்பே அந்த வேலையை தொடங்கிவிட்டார். மலையத்திலிருந்து கொழும்பில் பிழைக்க வந்து பெரிய இடத்திற்கு வந்தவர்கள், வசதியாய் வாழ்பவர்கள்தான் அவரது குறியில் சிக்குபவர்களாக இருக்கின்றனர்.

அவர்களிடம் கப்பம் என்ற பெயரில் பெருமளவு பணம் கறப்பது.

கொடுக்கவில்லையெனில் பாதாள உலகினரைக் கொண்டு மிரட்டி அவர்களது உடமைகளைப் பிடுங்குவது,

அவர்கள் ஏதேனும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்தால் அடியாட்களை கொண்டு அவர்களை கொலை செய்வதாக மிரட்டுவது,

மேலும் வெளிநாடுகளில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பணம் வாங்குவது,

மலையக பெண்களை வீடுகளில் வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது.

அரசியல் ரீதியாக பல அராஜகங்களை செய்வது.

உள்ளிட்ட பல சட்ட விரோதமான செயல்களை தனது அதிகாரத்தை துஸ்பிரயோகத்தால் இவர் மேற்கொள்ளுகின்றார். இதனால் மலையக மக்கள் பலர் தலைநகரில் பாரிய தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.

இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டது சிறுபான்மை இன மக்கள் ஆதலால் இவர்களில் அரசியல் செல்வாக்கு காரணமாக வெளியே சொல்ல பயப்படுகின்றார்கள். இவருக்கும் மேர்வின் சில்வாவுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.

நாம் இதை குற்ற புலனாய்வு துறை, மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு போயுள்ளோம். பாதிக்கபட்ட மக்கள் களனிபிரதேச மக்களை போன்று தைரியமாக முன்வரும் பட்சத்தில் இது ஜனாதிபதியின் நேரடி பார்வைக்கு அனுப்பப்படும். மக்கள் கொடுத்த அதிகாரத்தை மக்கள் மீதே பிரயோகிக்கும் இது போன்ற சமூகவிரோதி பாம்புகளை மக்கள் இனம்கண்டு தகுந்த தண்டனையை வழங்க வேண்டும்.

நலன்விரும்பி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com