Tuesday, January 10, 2012

பொலிஸ் சேவைக்கு புதிதாக ஆட்கள் சேர்த்துக்கொள்வதற்கான பரீட்சை 29 ம் திகதி.

பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களை இணைததுக்கொள்வதற்கான எழுத்துமூல பரீட்சை, எதிர்வரும் 29 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெறும்.

கொழும்பு விவேகானந்தா கல்லூரி, ஹமீட் அல் ஹூஸைனி கல்லூரி, பெலியத்த றுஹூணு விஜயபா மகா வித்தியாலயம், அநுராதபுரம் சென் ஜோசப் கல்லூரி, வலிசிங்க ஹரிஸ்சந்திர வித்தியாலயம் ஆகியவற்றில், பரீட்சைகள் நடைபெறும். அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள், 0112-430362 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு, பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com