Thursday, December 8, 2011

பாடசாலை விடுமுறை காலத்தில் விசேட கடுகதி ரயில் சேவைகள்.

பாடசாலை விடுமுறை காலத்தில் சுற்றுலாக்களை மேற்கொள்வதற்கு வசதியாக கொழும்பு கோட்டைக்கும், பதுளைக்கும் இடையே விசேட ரயில் சேவைகள் நடாத்தப்படுமென, ரயில்வே வர்த்தக அததியட்சகர் டபிள்யு.எஸ். சிசிரகுமார தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டைக்கும், பண்டாரவளைக்கும் இடையிலான விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

நாளை மறுநாள் ஆரம்பமாகும் இந்த சேவை, எதிர்வரும் 12, 15, 17, 19, 22, 24, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 09.15 க்கு ஆரம்பமாகும்.

இந்த சேவைகள் பிற்பகல் 05.20 க்கு, பண்டாரவளையை சென்றடையவுள்ளது. எதிர்வரும் 11, 13, 16, 18, 20, 23, 25, 27 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில், பண்டாரவளை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.40 க்கு கொழும்பு கோட்டை நோக்கி ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com