Thursday, December 8, 2011

கைதியின் வங்கியிலிருந்த பணத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி !

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரியொருவர், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரின் வங்கிக்கணக்கிலிருந்து பலாத்காரமாக பணத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பாக, விரிவான விசாரணைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பாக விசாரணையொன்றை நடாத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம், கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உத்தியோகத்தர் ஒருவர், தன்னிடமிருந்து ஏ.ரி.எம். அட்டையையும், அதன் ரகசிய இலக்கத்தையும் பலாத்காரமாக பெற்றுக்கொண்டுள்ளதாக, அப்பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார். தனது கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாவை, குறித்த அதிகாரி பெற்றுக்கொண்டதாகவும், அவர் தெரிவித்தார். இத்தகவல்கள், வங்கி கிளையின் பாதுகாப்பு கெமராவிலிருந்து பெற்றுக்கொண்ட காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com