Sunday, December 25, 2011

பாவனைக்கு ஒவ்வாத ஒருதொகை உணவு கைப்பற்றப்பட்டது. பலர் கைது!

விற்பனைக்கு தயார் நிலையிலிருந்த பயன்பாட்டுக்கு உதவாத ஒரு தொகை உணவு பொருட்கள், மாத்தளையில் கைப்பற்றப்பட்டன. பண்டிகைக்காலத்தில் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உணவு பொருட்களை பரிசோதிக்கும் விசேட நடவடிக்கைகள், நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றன.

மாத்தளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, பயன்பாட்டுக்கு உதவாத ஒரு தொகை உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அரிசி, குளிர்பானங்கள் உட்பட மேலும் பல உணவு பொருட்கள் இவற்றில் அடங்கியுள்ளன. இவற்றுடன் பல சந்தேக நபர்களும், கைது செய்யப்பட்டனர். அவர்கள், மாத்தளை நீதிமன்றத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஏ.ஜே.எம். சமந்த தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com