Sunday, December 25, 2011

சென்னை அருகே படகு விபத்தில் 21 பேர் பலி!

சென்னை அருகே இன்று மாலை நடந்த படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழ்ந்தனர். கிறிதுமஸ் பண்டிகயையொட்டி நெசப்பாக்கம், கும்மிடிப்பூண்டி மற்றும் பழவேற்காடு பகுதிகளை சேர்ந்த 7 குடும்பங்களை சேர்ந்த 25 பேர், சென்னையை அடுத்துள்ள பழகவேற்காடு ஏரியில் படகு ஒன்றில் சுற்றுலா சென்றனர்.

அப்போது படகு திடீரென கவிழ்ந்ததில்,அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதில் 4 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்த நிலையில், மீதமுள்ள 21 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஏரியில் விபத்து நடந்த இடம் சுற்றுலா செல்ல தடைவிதிக்கப்பட்ட இடம் என்றும், அளவுக்கு அதிகமானோரை ஏற்றி சென்றதாலேயே படகு நிலை தடுமாறி கவிழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலியானோரில் 8 பேர் பெண்கள், 2 பேர் பெண் குழந்தைகள் ஆவர்.

இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்க மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களின் சடலங்களை தேடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com