Sunday, December 25, 2011

சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்குண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

மத்துரட்ட, ஒக்கந்தவெல பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும், தந்தையும், சிறு பிள்ளையும், இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டுக்கு சமீபமாக விலங்குகளுக்கான பொறியாக, சட்டவிரோத மின்சார கம்பிகள், இறந்த தந்தையினால் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த மின்சார கம்பிகளில் சிக்குண்டே, இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் அறிவுறுத்தலின்றி, சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டாமென, மின்சக்தி அமைச்சு பல சந்தர்ப்பங்களில், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இருக்கும் போது, வீடுகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக்கொள்வது உட்பட விலங்குகளுக்கான பொறியாகவும், சிலர் மின்சார கம்பியை பொருத்துகின்றனர். இது ஒரு பயங்கரமான நிலையென மீண்டும் வலியுறுத்தியுள்ள மின்சக்தி அமைச்சு, இவ்வாறான செயற்படுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும, வலியுறுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com