Friday, December 23, 2011

நோ சமரசம்!! டக்ளஸ் என்னைப்பார்க்க வரக்கூடாது என்கிறார் வாங்கிக்கட்டிய மங்களநேசன்.

யாழ் மாநகர சபையின் உறுப்பினரும் ஈபிடிபி கட்சியின் முன்னாள் மூத்த உறுப்பினருமான மங்கள நேசன் மீது நேற்று வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக மங்களநேசன் அவர்களை இலங்கைநெற் தொடர்பு கொண்டுகேட்டபோது, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் கேள்வி பார்வையில்லால் பொல்லால் தனது இடுப்பில் அடித்துவிட்டு கண்முடித்திறப்தற்குள் மறைந்துவிட்டதாக கூறினார்.

கட்சியின் தோழர்கட்கு ஏதாவது சம்பவம் இடம்பெற்றால், ஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் பழக்கம் கொண்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உங்களை வந்து பார்த்தாரா எனக்கேட்டபோது, அவர் வரவில்லை , வரக்கூடாது என்பதே எனது எதிர்பார்பும் என்று தெரிவித்த மங்களநேசன் இத்தருணத்தில் டக்களஸ் வந்தால் அது சமரசத்திற்கான கதவைத் திறந்துவிடும் எனவும், டக்கிளசுடன் நோ சமரசம் எனவும் கூறினார்.

இத்தாக்குதலால் பயந்து விட்டீhகளா? எதிர்கால அரசியல் எவ்வாறு அமையப்போகின்றது எனக் கேட்டபோது.. பயம் எல்லாம் எப்போதோ செத்துப்போச்சு, நான் சின்னப்பொடியன் இல்லை, வயது 52 ஆச்சுது, பின்னால வந்து அடிச்சுப்போட்டு ஓடிட்டாங்க, ஆனால் நான் தைரியமாக உள்ளேன் என்றார்.

அத்துடன் எனது அரசியல் பணி தொடரும், ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையமாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com