Saturday, December 24, 2011

துமிந்த சில்வாவுக்கு இனி ஒரு காலும், ஒரு கையும் இயங்காதாம்

முல்லேரியான துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புபட்டு தற்போது வெளிநாட்டில் தீவிர சிகிச்சை பெற்றும் வரும் கொழும்பு மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவுக்கு இனி ஒரு காலும், ஒரு கையும் இயங்காது என மருத்துவ அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

நடந்து முடிந்த உள்ளூரதட்சி தேர்தலின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாரத லக்ஷ்மன் பிரேமச் சந்திர கொல்லப்பட்டு துமிந்த சில்வா படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைவாக இவரின் மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

இவ்வழக்கு எதிர்வரும் ஜனவரி 3ஆம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com