Monday, December 19, 2011

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கத்தை பேண விசேட குழு நியமனம்

பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சபை நடவடிக்கையின் போது உறுப்பினர் மத்தியில் ஒழுக்க விழுமியங்களை பேணுவதற்காக விசேட பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இக்குழுவினை நியமித்துள்ளார். இதன் தலைவராக அமைச்சர் டிவ் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்களான பி. தயாரத்ன, அனுர பிரயதர்ஷன யாப்பா ஆகியோர் அரசாங்கம் சார்பிலும், பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, விஜயதாச ராஜபக்ஷ, ஆர் சம்பந்தன் ஆகியோர் எதிர்கட்சியின் சார்பிலும் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com