Thursday, December 15, 2011

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்கள் பிரச்சினை தொடர்பாக விசேட கூட்டம்

பயங்கரவாதம் காரணமாக, இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்சென்று, மீண்டும் நாடு திரும்பிய மக்களின் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு நாடு திரும்பி வவுனியாவில் குடியேறியுள்ள சுமார் 7 ஆயிரம் பேருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான விசேட சந்திப்பொன்று, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தலைலமையில் இடம்பெற்றது.

இந்த மக்களின் காணி, மின்சாரம், போக்குவரத்து மற்றும் சுகாதார நெருக்கடிகள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டன.

வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர். மீள்குடியமர்ந்த மக்கள் வாழும் கிராமங்களை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com