Thursday, December 15, 2011

கல்முனை பிரதேச செயலக சமுர்தி பிரிவின் 'திவிநெகும' வாழ்வாதார வேலைத் திட்டம்

கல்முனை பிரதேச செயலக சமுர்தி பிரிவின் ஏற்பாட்டில் 'திவிநெகும” வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமை பிரதேச செயலக அபிவிருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது

சமுர்தி பிரிவின் தலைமை பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம.எம்.நௌபல் கலந்து கொண்டார்.விஷேட அதிதியாக பிரதம லிகிதர் எம்.ஜௌபர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சமுர்தி உதவிப் பெரும் குடும்ப உத்தியோகத்தர்கள் 35 பேருக்கு மீன் பிடி தையல் மற்றும் சிறுவியாபாரம் ஆகிய தொழில் முயற்சிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

படப்பிடிப்பு – பி.எம்.எம்.ஏ. காதர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com