Saturday, December 3, 2011

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் உலக எயிட்ஸ் தின ஊர்வலம்

நீர்கொழும்பு சிறைச்சாலைணயில் உள்ள கைதிகள் சிலர் உலக எயிட்ஸ் தின நிகழ்வையிட்டு இன்று முற்பகல் எயிட்ஸ் ஒழிப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியபடி சிறைச்சாலையின் வெளிப்பகுதியை சுற்றி ஊர்வலமாக சென்றனர்.

உலக எயிட்ஸ் தினத்தையிட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் எயிட்ஸ் தொடர்பாக கைதிகளுக்கு விழிப்புட்டும் நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிமுதல் நடத்தப்பட்டது.இதன் ஒரு அங்கமாகவே எயிட்ஸ் கவனயீர்ப்பு ஊர்வலம் இடம் பெற்றது.

இதனை நீர்கொழும்பு கைதிகள் நலன்புரி சங்கம் நீர்கொழும்பு சிறைச்சாலை நிருவாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வின் ஒரு பகுதியாக கைதிகள் சிலர் எயிட்ஸ் ஒழிப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி சிறைச்சாலையின் வெளிப்பகுதியை சுற்றி ஊர்வலமாக சென்றனர்.

உலக எயிட்ஸ் தினம் டிஸம்பர் முதலாம் திகதியாகும்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com