Tuesday, December 6, 2011

கடத்தப்பட்டவரை விடுவிக்கக்கோரி ஜெம்பட்டா பகுதியில் வீதிமறியல் போராட்டம்!

கொழும்பு – கொச்சிக்கடை, ஜெம்பட்டா வீதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வேனில் வந்த ஆயுததாரிகளால் நேற்று பிற்பகல் கடத்தப்பட்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று கொச்சிக்கடைப் பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன்,வீதியில் டயர்ளை போட்டு தீ வைத்தனர்.பொதுமக்கள் வீதயை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

, 55 வயதான கிறிஸ்தோப்பர் பெர்னாண்டோ என்பவரே நேற்று பிற்பகல் வேன் ஒன்றில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டவராவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com