Saturday, December 31, 2011

பிரபாகரனின் படத்தை பிராண்ஸ் முத்திரை வெளியிட்டதாம். புலிகளின் புதுப் புளுடா!

பிராண்ஸ் அரசின் அங்கீகாரத்துடன் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படம் உட்பட அவ்வியக்கத்தின் சின்னங்களும் பிராண்ஸ் தபாலகத்தினால் முத்திரைகள் வெளியாகியுள்ளது என புலிகளின் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

மாவீரர் தின வசூலிப்புக்கள் முடிவடைந்தவுடன் அடுத்த வசூலிப்புக்கு தயாராகும் புலிகள் விடுத்த புளுடாவே இந்த முத்திரைக் கதை.

பிபிசி யிடம் சம்பளமும் புலிகளிடம் கிம்பளமும் வாங்கும் செய்தியாளர்களும் இம்முத்திரைக் கதைக்கு வலுச்சேர்த்துள்ளமை ஒன்றும் புதிய விடயம் அல்ல.

இவ்வாறான புலுடாக்களை புலிகள் விடும்போது பிபிசி யில் இருந்து கொண்டு புலிகளிடம் கிம்பளம் வாங்குவோர் அச்செய்திகள் எவ்வாறு மெருகூட்டுகின்றனர் தெரியுமா? முதலில் புலிகளின் ஊதுகுழல் இணையங்களில் செய்தியை வெளியிடச் சொல்வர். பின்னர் அச்செய்திகளை எடுத்துக்கொண்டு இணையங்கள் இவ்வாறு செய்தி தெரிவிக்கின்றது என உயர் அதிகாரிகள் மற்றும் ராஜதந்திரிகளிடம் கருத்துக்கேட்பர். அது கொடர்பாக வருகின்ற கருத்தை தமக்கேற்றவாறு பிரசுரிப்பர். அவ்வளவுதான். பின்னர் புலிவால் இணையங்கள் யாவும் பிபிசி யின் செய்தியை காவுவர்.

பிரபாகரனின் கொத்துப்படாத மண்டையை கொண்ட படத்துடன் முத்திரை ஒன்று வெளியாகியுள்ளது உண்மை. ஆனால் அது பிராண்ஸ் நாட்டு அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் தமிழ் மக்கள் ஏமாளிகள், நாம் தொடர்ந்தும் ஏமாற்றுவோம், எம்மை யாரும் தடுக்க முடியாது என புலிகள் கங்கணம்கட்டி நிற்பதற்குச் என்பதற்கு சான்று.

பிராண்சில் தபால் திணைக்களத்தில் தாம் விரும்பும் படத்துடன் முத்திரையை கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதை நேரடியாகவும், இணையத்தளம் ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும். பிறந்த தினச் வாழ்த்துக்கள், கல்லயாண அழைப்பிதழ்கள், கல்யாணநாள் வாழ்த்துக்கள் போன்ற பல்வேறு ஞாபக நிகழ்வுகளுக்காக இவ்வாறான முத்திரை தலைகளை கொள்வனவு செய்யும் கலாச்சாரம் ஒன்று பிராண்ஸ் நாட்டு பிரஜைகளிடையே உண்டு.

அதற்கான இணையத்தள முகவரியை இங்கு கிளிக்செய்து கண்டு கொள்ளுங்கள்.

அத்துடன் இவ்வாறு குழந்தைகள் மற்றும் திருமணமான ஜோடிகளின் புகைப்படத்துடன் முத்திரை தலைப்புக்களை இங்கு காண்கின்றீர்கள்.



இந்த இடைவெளியினுள் புகுந்த புலிகள் தமிழரை ஏமாற்ற எடுத்த நடவடிக்கைக்கு விநாயகம் குழு , நெடியவன் குழு என்ற வித்தியாசம் இல்லாமல் தற்போது பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் முத்திரை விற்பனையாகி பணம் பங்கிடுவதில் பிரச்சினை எழும். அத்தருணத்தில் இதன் போலித்தன்மையை அவர்களே வெளியிடுவர்.

இதேநேரம் இவ்வாறான முத்திரைகளை வெளியிடமுடியும் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக புலம்பெயர் தமிழ் மக்களின் நலன் விரும்பிகள் இணைந்து தமிழர் விடுதலைப் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அ.அமிர்தலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் உமா மகேஸ்வரன்(புளொட்), தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபா (ஈபிஆர்எல்எவ்) ஆகியோருக்கான முத்திரைகள் பிரான்சில் வெளியிடப்பட்டுள்ளது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com