Saturday, December 17, 2011

இனியபாரதிக்கு தூது விடுகின்றது ரிஎன்ஏ.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சகல தமிழ் கட்சிகளையும் தம்முடன் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஜனாதிபதிக்கான அம்பாறை மாவட்ட செயலாளர் இனிய பாரதியையும் தம் பக்கம் இழுத்துக்கொள்ளும் பொருட்டு தூது அனுப்பியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மாவை சேனாதிராஜாவின் ஆலோசனையின் பேரில் பிரதேசத்திலுள்ள ரிஎன்ஏ முக்கியஸ்தர் ஒருவரே இனியபாரதியை சந்தித்து பேசியதாக தெரியவருகின்றது.

இனியபாரதி புலிகளின் புலம்பெயர் கட்டமைப்பை சிதைக்கும்; செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் அண்மையில் ஐரோப்பிய விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தான செய்திகள் வெளியாகியுள்ள நிலையில்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இச்செயற்பாடு புலம்பெயர் புலிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com