Friday, December 2, 2011

வாத்து பிடித்தவரை துப்பாக்கியால் சுட்ட நாய்

அமெரிக்காவில் உள்ள பிர்காம் நகரை சேர்ந்தவர் ஜான் (46) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் உதா என்ற இடத்தின் அருகே உள்ள சால்ட் லேக் ஏரிக்கு தனது நண்பருடன் சென்றார். அப்போது தன்னுடன் வீட்டில் வளர்க்கும் செல்ல நாயையும் அழைத்து சென்று இருந்தார்.

அந்த ஏரியில் அவர் படகு சவாரி செய்தார். அப்போது தண்ணீரில் மிதந்து சென்ற வாத்துகளை பிடிக்க கண்ணி வைத்திருந்தார். அதில் சில வாத்துகள் சிக்கி இருந்தன.

எனவே, படகில் இருந்து இறங்கிய ஜான் தண்ணீருக்குள் சிக்கிய வாத்துகளை பிடித்து கொண்டிருந்தார். அப்போது படகில் இருந்த நாய் துப்பாக்கியை எடுத்து அவரை பின்புறம் சுட்டது. இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேசன் செய்து உடலில் பாய்ந்து இருந்த குண்டு அகற்றப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com