Friday, December 2, 2011

8ம் வகுப்பு மாணவியிடம் சேட்டை புரிந்த வாத்தியார் பணிநீக்கம். கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சி - வட்டக்கச்சி மகாவித்தியாலயத்திற்கு புதிதாக யாழ்பாணத்திலிருந்து சங்கீத பாடத்திற்கு நியமனம் பெற்றுவந்த திருமணமான இளம் ஆசிரியர் ஒருவர் தரம் எட்டு மாணவியுடன் பாடசாலையில் வைத்து தகாத முறையில் நடந்து கொண்டமையால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவியின் தந்தை யுத்தத்தின் போது இறந்துவிட்டார்.

இதனால் தாய் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்.

மாணவி தனது அம்மம்மாவின் பராமரிப்பில் இருந்து வருகின்ற நிலைiயில் அவர்களின் அறியாமையையும் வறுமையினையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தியே இக்கீழ்த்தரமான செயலில் ஆசிரியர் ஈடுபட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் தற்போது பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் வட மாகாண கல்வித் திணைக்களத்தினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிகளுடன் இவ்வாறு கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களை பணியிலிருந்த நிறுத்துவதோடு இவர்களுகெதிராக கடுமையான சட்ட நடவடிக்கையினையும் மேற்கொள்ள வேண்டும் என்பது மனித உரிமைகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com