அமெரிக்காவில் உளவு பார்த்த சீன நாட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை.
அமெரிக்க நிறுவனத்தில் உளவு வேலை பார்த்ததாக சீனநாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரி்க்காவை சேர்நத விவசாய நிறுவனம் ஒன்றில் பணிபுரி்ந்து வந்தார் சீனாவை சேர்ந்த ஹூவாங்ஹெச்யூ(46).
இவர் கடந்த 2003 முதல் 2008-ம் ஆண்டு வரை மேற்கண்ட நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கால கட்டத்தில் அந்நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை சீன நிறுவனத்திற்கு அளித்தாக புகார் கூறப்பட்டது.மேலும் ஜெர்மன் நாட்டிற்கும் ரகசியங்களை விற்றதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய இண்டியானா பகுதியை சேர்ந்த நீதிபதி வில்லியம் லாரன்ஸ் இவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஹூவாங் ஏற்கனவே இது போன்ற வழக்கு ஒன்றிற்காக 25 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே ஆண்டில் சீன இன்ஜினியர் ஒருவர் அமெரிக்காவின் போர்டு நிறுவனத்தின் ரகசியங்களை சீனாவை சேர்ந்த கார் தயாரிப்பாளர் ஒருவருக்கு கடத்தியதாகவும், 2010-ம் ஆண்டில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரகசியங்களை தம்பதிகள் கடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment