Thursday, November 10, 2011

ஜப்பான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்.

ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான கடற்படை உறவுகளை மேலும் விஸ்தரிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கரையோர பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு, வருகை தந்த இக்கப்பல்களை கடற்படை சம்பிரதாயங்கள் படி, இலங்கை கடற்படை வரவேற்றனர்.

பாரசீக குடா கடலில் இடம்பெற்ற கூட்டு கடற்படை ஒத்திகையின் பின்னர், ஜப்பான் நோக்கி செல்லும் வழியில், இவ்விரண்டு கப்பல்களும், கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்மை, குறிப்பிடத்தக்கது.

இக்கப்பல்கள், நாளை இங்கிருந்து புறப்படவுள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான கடற்படை நல்லெண்ண தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களும், வகுக்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com